அன்றொரு நாள் அம்மா கேட்டாள்
என்ன இது கையெழுத்து, கோழிக் கிறுக்கல் !
இன்னொரு நாள் நண்பன் கேட்டான்
என்ன இது கையெழுத்து, Calligraphy a?
கோழிக் கிறுக்கல் Calligraphy ஆன கதை
உங்களுக்குத் தெரியுமா?
நிலா, வானம், காற்று, மழை புதிதாய் வேண்டும்
தண்ணீரில் நிற்கும்போதே வேர்வையும், தாகமும் வரும்
மழை சுடும், நிலவு சுடும்
என்று யோசித்து யோசித்து எழுதினாலும்
அது எங்கேயோ கேட்ட குரல் !
ஆயிரத்தோராவது முறை எழுதும் போதும்
முதல்முறை போல் இனிக்கும் ஒரேயொரு கவிதை
அவள் பெயர் !
தெய்வீகமானது, புனிதமானது என்று விளக்க முயற்சித்த அதிமேதாவிகளைச் சாதாரணமாகத் தோற்கடித்திருக்கிறது ! விளக்கவே முடியாது என்று சொல்பவர்களையும் சேர்த்தே ! அதை விளக்க ஒரு வரியில்லை, ஒரு வார்த்தை கூட மிகையே !