அவளுக்கு எனவொன்றை
ஆசையாய் வாங்குகையில்
இதயத்தில் எங்கும்
ஈடில்லா உற்சாகம் !
உயிரின்றி இயங்காத
ஊன்போல் நானவளின்றி !
எனக்கான செல்வமாய்
ஏழிசையில் மெல்லிசையாய்
ஐந்திணையில் சிந்தனையாய்
ஒருத்தியவள் போதுமென்று
ஓர்நாள் கூறுகையில்
ஒளவியம்தான் கொண்டாள் அவளுடைய தோழி !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment