அன்றொரு நாள் அம்மா கேட்டாள்
என்ன இது கையெழுத்து, கோழிக் கிறுக்கல் !
இன்னொரு நாள் நண்பன் கேட்டான்
என்ன இது கையெழுத்து, Calligraphy a?
கோழிக் கிறுக்கல் Calligraphy ஆன கதை
உங்களுக்குத் தெரியுமா?
நிலா, வானம், காற்று, மழை புதிதாய் வேண்டும்
தண்ணீரில் நிற்கும்போதே வேர்வையும், தாகமும் வரும்
மழை சுடும், நிலவு சுடும்
என்று யோசித்து யோசித்து எழுதினாலும்
அது எங்கேயோ கேட்ட குரல் !
ஆயிரத்தோராவது முறை எழுதும் போதும்
முதல்முறை போல் இனிக்கும் ஒரேயொரு கவிதை
அவள் பெயர் !